அதிக நேரம் ஒரே இடதில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு காத்திருக்கு ஆபத்து!
தொடர்து ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரித்தல், தொப்பை ஏற்படுதல் போன்ற மேலும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தற்போது தொடர்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படுவதாக மற்றுமொரு ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், வீடியோ game விளையாடுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் உலக அளவில் 27 மில்லியன் மக்கள் இவ்வாறு மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும். அவுஸ்திரேலியாவில் வயது வந்தவர்களில் 14 சதவீதமானவர்வகளுக்கும், 16 தொடக்கம் 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 15 சதவீதமானவர்களுக்கும் இப்பாதிப்பு உள்ளதாக Deakin பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.